செம்பாவாங் கடற்கரைக்கு அருகிலிருக்கும் Andrews avenue சாலை வழியாகச்
சென்றால் பாதி வழியில் தனியார் வீடுகள் மறைந்து மரங்கள் அடர்ந்த சாலையான Jln
Mempurong வருகிறது. தொடர்ந்து நடந்தோமென்றால் அச்சாலையின் இறுதியில் Masjid Petempatan Melayu Sembawang என்றழைக்கப்படும் இம்மசூதியைப் பார்க்கலாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை இந்தப் பகுதி இஸ்லாமியர்களின் கல்லறைகளைக் கொண்டிருந்திருக்கிறது. 1900 களின் துவக்கத்தில் அவை அகற்றப்பட்டு ரப்பர் தோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் 1940களில் அந்த ரப்பர் தோட்டமும் அகற்றப்பட்டு செம்பவாங் கடற்படைத் தளத்தில் வேலை செய்த மலாய் ஊழியர்களுக்காக ஒரு சிறு குடியிருப்பு இப்பகுதியில் உருவானது. பின்னர் 1963 ல் இந்த மசூதி கட்டப்பட்டது. அதன் வாயிலில், இந்த ரப்பர் மரம் அங்கு ஒருகாலத்திலிருந்த ரப்பர் வனத்தின்் கடைசி சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.
இந்த மரத்தை வெட்ட முயன்ற
போதெல்லாம் அதை செயல்படுத்த நினைத்தவர்களுக்கு ஏதோவொரு பாதிப்பு ஏற்பட்டதாம். அந்த
மசூதியை இந்த மரம் காத்து நிற்கிறது என்று மலாய்க்காரர்கள் நம்புகிறார்கள்.
1 கருத்து:
என்னென்ன பயங்கள்... என்னென்ன நம்பிக்கைகள்!
கருத்துரையிடுக