ஞாயிறு, 19 அக்டோபர், 2014

வரிக் கவிதைகள்

1
வாழ்க்கை
உளியால் ஓங்கி
செதுக்கியபடி இருக்கிறது,
சிலையாகிக் கொண்டிருக்கிறேன் . . .

2
நான் எழுதிய கவிதை
நகைச்சுவையாய் இருக்கிறது என்று
நீங்கள் பின்னூட்டமிட்ட போது
அதன் வார்த்தைகளில் ஒட்டியிருந்த
நகைத்தன்மை உதிர்ந்துவிட்டது....
முரண் நகைக் கவிதையை
இயற்ற உதவிய உங்களுக்கு
நன்றி!


3
பன்னிரெண்டு வார்த்தைகளில் கவிதை வேண்டுமாம்
சொற்களை வடித்துக் கொண்டிருக்கும் போதே
முற்றுப்புள்ளியின் குறுக்கீட்டால்
முடிந்துவிட்டது கவிதை.